பொங்கல் தினத்தில் யாழில் வாள்வெட்டு : இருவர் படுகாயம்
In இலங்கை January 15, 2019 9:45 am GMT 0 Comments 1390 by : Dhackshala
யாழ்ப்பாணம், காங்கேசன்துறைவீதி நாச்சிமார் கோயிலடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தைப்பொங்கல் தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) நாச்சிமார் கோயிலில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
இந்நிலையில் கோயிலுக்கு அருகிலிருந்த இளைஞர்கள் மீது, வாள்வெட்டுக்குழு தாக்குதலை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளது.
குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் ஒரு இளைஞருடைய வலதுகை பெருவிரல் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாள்வெட்டுக்குள்ளான இருவரும் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களே இந்த வாள்வெட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் குறித்து யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.