யாழ்ப்பாணம்- பருத்தித்துறையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு
In இலங்கை February 21, 2021 4:05 am GMT 0 Comments 1216 by : Yuganthini

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த 30 வயதானவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பருத்தித்துறை பகுதியில் அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.