யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம் !
In இலங்கை January 30, 2021 4:31 am GMT 0 Comments 1645 by : Jeyachandran Vithushan
வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக சுகாதாரத் துறையினருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று (சனிக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள் நால்வருக்கு யாழ். போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர்த.சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் போதனா வைத்தியசாலையில் வைத்து தமக்கான கொரோனா தடுப்பூசி மருந்தை ஏற்றிக்கொண்டனர்.
வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரத்து 820 மருத்துவ சேவையாளர்கள், சுகாதாரத் துறையினருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.