யாழ்.பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் தீ!
யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் அமைந்துள்ள பகுதியில் தீ ஏற்பட்டுள்ளது.
வவுனியா வளாகத்திற்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் பற்றைக்காடுகளாக காணப்பட்ட பிரதேசத்திலேயே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு தீ ஏற்பட்டுள்ளது.
கடும் காற்று மற்றும் வெயில் காரணமாக தீ வேகமாக பரவியதையடுத்து அதனை கட்டுப்படுத்துவதற்காக வவுனியா நகரசபையின் தீ அணைப்பு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
வவுனியா வளாகத்தின் கட்டடத் தொகுதிக்கு தீ பரவாது தடுக்கப்பட்டுள்ளமையினால் பாரிய சேதங்கள் ஏற்படவில்லை.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.