ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக 40ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் 40ஆயிரத்து 464பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட நான்காவது நாடாக மாறியுள்ள ரஷ்யாவில், இதுவரை மொத்தமாக 23இலட்சத்து 22ஆயிரத்து 056பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ரஷ்யாவில் 26ஆயிரத்து 402பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்ததோடு, 569பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நான்கு இலட்சத்து 78ஆயிரத்து 125பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதவிர ரஷ்யாவில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 18இலட்சத்து 03ஆயிரத்து 467பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.