ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து 30இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து 30இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் இதுவரை மொத்தமாக 30இலட்சத்து இரண்டாயிரத்து 26பேர் மீண்டுள்ளனர்.
கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் ரஷ்யாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் தொற்றினால் 36இலட்சத்து 12ஆயிரத்து 800பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 66ஆயிரத்து 623பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ரஷ்யாவில் 21ஆயிரத்து 734பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்ததோடு, 586பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஐந்து இலட்சத்து 44ஆயிரத்து 151பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.