ரி-10: டெல்லி புல்ஸ் அணி சிறப்பான வெற்றி!

ரி-10 கிரிக்கெட் லீக் தொடரின் 15ஆவது லீக் போட்டியில், டெல்லி புல்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.
அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில், டெல்லி புல்ஸ் அணியும் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி புல்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கிய்ரன் பொலார்ட் 47 ஓட்டங்களையும் அசாம் கான் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
டெல்லி புல்ஸ் அணியின் பந்துவீச்சில், ஹமத் பட் மற்றும் அலி கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எட்வட்ஸ், சிராஸ் அஹமட் மற்றும் பிராவோ ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 119 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய டெல்லி புல்ஸ் அணி, 8.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 8 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரஹமதுல்லா குர்பாஸ் 47 ஓட்டங்களையும் எவீன் லீவிஸ் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சில், இம்ரான் தாஹீர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அலி கான் தெரிவுசெய்யப்பட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.