ரோகித் சேகர் திவாரி கொலை விவகாரம்: அவரது மனைவி கைது
In இந்தியா April 24, 2019 7:57 am GMT 0 Comments 2378 by : Yuganthini

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் என்.டி.திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரி கொலை வழக்கில் அவரது மனைவி அபூர்வாவை பொலிஸார் கைது செய்துள்ளார்.
ரோகித் சேகர் திவாரி இயற்கை மரணமடையவில்லையென அவரது உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் பொலிஸார் பல கோணத்தில் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் ரோகித் சேகர் திவாரியின் மனைவியான அபூர்வாவிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் விசாரணைகளை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் குறித்த கொலையில் அவருக்கு தொடர்பு இருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
ரோஹித் திவாரி உயிரிழந்த வேளையில் அவரது வீட்டில் மனைவி அபூர்வா, அவரது உறவினர் சித்தார்த், வீட்டுப் பணியாளர்கள் இருந்துள்ளனர். ஆகவேதான் அவரது மனைவியிடம் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.