ரோமேனியாவில் கொவிட்-19 தொற்றினால் 15ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், 15ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரோமேனியாவில் வைரஸ் தொற்றினால் 15ஆயிரத்து 23பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் ரோமேனியாவில் இதுவரை வைரஸ் தொற்றினால் ஆறு இலட்சத்து 12ஆயிரத்து 373பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் மூவாயிரத்து 812பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 111பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 67ஆயிரத்து 42பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 233பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதுதவிர வைரஸ் தொற்றிலிருந்து ஐந்து இலட்சத்து 30ஆயிரத்து 308பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.