News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • அமெரிக்காவின் உதவிகளை தடுக்கும் முயற்சி!- எல்லையை மூடியது வெனிசுவேலா
  • மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டாமென கோரி ஆர்ப்பாட்டம்
  • கட்சித்தலைவர்கள் கூட்டத்திற்கு சட்டமா அதிபருக்கு அழைப்பு
  • கனடா தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு குழந்தைகள் உயிரிழப்பு
  • புல்வாமா தாக்குதல் கொடூரமானது: டொனால்டு ட்ரம்ப்
  1. முகப்பு
  2. ஆசிரியர் தெரிவு
  3. ‘றோ“ ஒற்றர்களை அமைச்சரவையில் வைத்துக் கொண்டு நாட்டை நடத்த முடியாது – விமல்!

‘றோ“ ஒற்றர்களை அமைச்சரவையில் வைத்துக் கொண்டு நாட்டை நடத்த முடியாது – விமல்!

In ஆசிரியர் தெரிவு     October 25, 2018 3:00 am GMT     0 Comments     1513     by : Benitlas

‘றோ“ ஒற்றர்களை அமைச்சரவையில் வைத்துக் கொண்டு நாட்டை நடத்த முடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சட்ட விரோத கடவுச் சீட்டைப் பயன்படுத்தி 23-10-2015 அன்று சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு நேற்று(வியாழக்கிழமை) நீர்கொழும்பு நீதிமன்றின் இரண்டாம் இலக்க அறையில் இடம்பெற்றது.

குறித்த வழக்கு விசாரணையின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவித்தல் வந்தவுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மைதானத்தில் விளையாடும் வீரரின் பெயரை குறிப்பிடுவார்.

பின்னர் ஏனைய வீரர்களும் இணைந்த விளையாடி வெற்றி பெறுவோம். அமைச்சர் மகிந்த அமரவீரவின் கருத்தின்படி அமைச்சரவையில் “றோ“ அமைப்புக்கு உதவி புரியும் நான்கு அமைச்சர்கள் உள்ளனர்.

தற்போது ஜனாதிபதிக்கு உள்ள பொறுப்பு அந்த நான்கு அமைச்சர்களினதும் காதைப் பிடித்து அவர்களை அமைச்சரவையிலிருந்து வெளியேற்றுவதுதான்.

“றோ“ ஒற்றர்களை அமைச்சரவையில் வைத்துக் கொண்டு நாட்டடை நடத்த முடியாது. அந்த அமைச்சர்கள் யார் என்பதை கூற வேண்டும். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தாக்கல் செய்துள்ள வழக்குகள் யாவும் அவர்களுக்கு தோல்வியாவே அமைந்துள்ளன.

ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோவின் வழக்கும் அவ்வாறுதான் அமைந்தது. பழிவாங்கும் நோக்கில் தாக்கல் செய்யபடும் வழக்குகளே அவைகளாகும்.

பழிவாங்கும் நோக்கில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கு ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோவின் வழக்குக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும்“ என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • கோட்டாவே அடுத்த ஜனாதிபதியென முடிவு செய்துவிட்டனர் – கம்மன்பில  

    முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவாரெனும்

  • கிரேக்க அமைச்சரவையில் மாற்றம்!- முக்கிய பதவிகளில் மாற்றமில்லை  

    கிரேக்க அமைச்சரவை மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க பேச்சாளர் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழம

  • ஜனாதிபதி தனது அமைச்சுப் பொறுப்புக்களைத் துறக்க வேண்டும்: மனுஷ நாணயக்கார  

    தேசிய அரசாங்கத்தினை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்வசமுள்ள அம

  • ராஜபக்ஷேக்கள் இடையே பனிப்போர் நிலவுகிறது: பொன்சேகா  

    ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளர் தொடர்பாக ராஜபக்ஷேக்கள் இடையே பனிப்போர் தோற்றம் பெற்றுள்ளதாக ஐக்கிய தேசி

  • பிரதமரின் கோரிக்கைக்கு அமைச்சரவை மறுப்பு  

    உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்க மறுத்துள்ளது. குறித்த ஆணைக்கு


#Tags

  • 'றோ“ ஒற்றர்
  • அமைச்சரவை
  • ஜனாதிபதி தேர்தல்
  • போலி கடவுச்சீட்டு
  • விமல் வீரவன்ச
    பிந்திய செய்திகள்
  • மதியச் செய்திகள் (19.02.2019)
    மதியச் செய்திகள் (19.02.2019)
  • மதியச் செய்திகள் (18.02.2019)
    மதியச் செய்திகள் (18.02.2019)
  • மதியச் செய்திகள் (17.02.2019)
    மதியச் செய்திகள் (17.02.2019)
  • காலைச் செய்திகள் (19.02.2019)
    காலைச் செய்திகள் (19.02.2019)
  • காலைச் செய்திகள் (18.02.2019)
    காலைச் செய்திகள் (18.02.2019)
  • காலைச் செய்திகள் (17.02.2019)
    காலைச் செய்திகள் (17.02.2019)
  • மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டாமென கோரி ஆர்ப்பாட்டம்
    மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டாமென கோரி ஆர்ப்பாட்டம்
  • அருள்மழை பொழியும் வட்டக்கச்சி ரங்கராஜப் பெருமாள் கோயில்
    அருள்மழை பொழியும் வட்டக்கச்சி ரங்கராஜப் பெருமாள் கோயில்
  • தமிழ் மறவர் துயிலும் மன்னவர் மாண்பின் நிலம் கோப்பாய்
    தமிழ் மறவர் துயிலும் மன்னவர் மாண்பின் நிலம் கோப்பாய்
  • கனடா தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு குழந்தைகள் உயிரிழப்பு
    கனடா தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு குழந்தைகள் உயிரிழப்பு
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.