லண்டனில் முடக்கத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட 155 பேர் கைது
In இங்கிலாந்து November 29, 2020 4:08 am GMT 0 Comments 1921 by : Jeyachandran Vithushan

முடக்க கட்டுப்பாடுகளுக்கு எதிரான மற்றும் தடுப்பூசிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 155 பேர் லண்டனில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் அதிகாரியைத் தாக்கியமை, போதைப்பொருள் வைத்திருத்தல், கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மீறுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் தற்போது நடைமுறையில் உள்ள பகுதியளவிலான முடக்கம் எதிர்வரும் 2 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. இதனை 20 ஆம் திகதிவரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேலும் பொய்களை கூறவேண்டாம், இனிமேல் முகக்கவசங்கள் இல்லை, முடக்கம் வேண்டாம் என்ற வாசகங்கள் ஏந்திய பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.