லிபியாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

லிபியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, லிபியாவில் இதுவரை ஒரு இலட்சத்து ஆயிரத்து 348பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 78ஆவது நாடாக விளங்கும் லிபியாவில், இதுவரை ஒரு இலட்சத்து 21ஆயிரத்து 243பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 914பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 809பேர் பாதிக்கப்பட்டதோடு 18பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுதவிர வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 17ஆயிரத்து 981பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.