அனைத்து பகுதிகளையும் கூட்டமைப்பு கைப்பற்றும்: சத்தியலிங்கம் நம்பிக்கை
வடக்கு-கிழக்கு அனைத்து பகுதிகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும் என மாகாண சபை உறுப்பினர் பா. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வைரவபுளியங்குளத்தில் உள்ள வாக்குச் சாவடியில் இன்று (சனிக்கிழமை) வாக்களித்த பின்னர் ஆதவனுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், “வவுனியா உட்பட வடக்கு-கிழக்கு அனைத்து பகுதிகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும். இதன் ஊடாக தமிம் பேசும் மக்களுக்கான அனைத்து வாழ்வாதார உதவிகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளூராட்சி சபையின் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னெடுக்கும்” என கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.