News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
  • திராவிடர் கழகத்தின் தலைவராக கலிபூங்குன்றன் தேர்வு!
  • மஹிந்தவை மீறி தமிழர்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடையாது – திஸ்ஸ விதாரண
  • மக்களவை தேர்தல்: 25ம் திகதி முதல் விருப்பமனு விநியோகம் – தி.மு.க.
  • வர்த்தக உடன்படிக்கை குறித்து சீனா – அமெரிக்கா பேச்சு!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. வடக்கு மக்களை மீண்டும் வன்முறையை நோக்கி செல்லவிடமாட்டோம்: அநுரகுமார  திசாநாயக்க

வடக்கு மக்களை மீண்டும் வன்முறையை நோக்கி செல்லவிடமாட்டோம்: அநுரகுமார  திசாநாயக்க

In இலங்கை     August 13, 2018 6:59 am GMT     0 Comments     1741     by : Yuganthini

வடக்கு மாகாணத்திலுள்ள மக்களை மீண்டும் வன்முறைக்கு செல்வதற்கு அனுமதிக்கமாட்டோமென, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார  திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

குருவிட்ட  பகுதிகளில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“பிரதமர் ரணில் மற்றும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் நாட்டின் நலன்கள் தொடர்பாக பேசுவதற்கு எந்ததொரு தகுதியும் அற்றவர்கள் ஆவர்.

மேலும்  70 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்த ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றினால் எந்ததொரு பாரிய அபிவிருத்தியும் இடம்பெறவில்லை என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் ரணில் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு இன்னும் 32 வருடங்களை தாருங்களென கேட்கிறார். ஆனால் இந்த 32 வருடங்களில் அவர் உயிரோடு இருப்பாரா என்பதே சந்தேகமாகும்.

இதேபோன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 10 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்தார். ஆனால் அவரும் பாரிய மாற்றங்களை பெரிதாக ஏற்படுத்தவில்லை. அவரும் தற்போது 5 வருடங்களை தாருங்கள் என்கிறார்.

உண்மையில்  நாட்டை ஆட்சி செய்த இவ்விரு கட்சிகளுக்கும் நாட்டுக்கு அவசியமானது என்ன என்பது இன்னும் தெரியவில்லை.

இதேவேளை எமது கட்சியிடம் சில அரசியல் புத்திஜீவிகள் நாட்டை எவ்வாறான துறைகளின் வாயிலாக அபிவிருத்தி செய்ய வேண்டுமென்பது தொடர்பாக தெளிவுபடுத்தியுள்ளனர்.

மேலும் நாட்டில் கட்டங்களை உயர்த்துவதில் மாத்திரம் அபிவிருத்தி ஏற்படுவதில்லை. மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் செயற்பாட்டின் ஊடாகவே அபிவிருத்தி மேற்கொள்ள முடியும்” என அநுரகுமார  திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!  

    இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளை விரிவுபடுத்துவது தொடர்பாக, இரண்டு நாடுகளுக்கும் இடையில் ப

  • 128-குள் தென்னாப்பிரிக்கா சுருண்டது – இலங்கைக்கு 197 ஓட்டங்கள் வெற்றி இலக்கு  

    இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ

  • பொறுப்புக்கூறல் இல்லாத நல்லிணக்கம் நின்றுநிலைக்குமா?  

    இலங்கையில் ஆயுதப்போராட்டம், மிலேச்சத்தனமான முறையில் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு எதிர்வரும் மே மாதத்து

  • காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் – ஐ.நா.வில் இலங்கை குறித்து ஆய்வு!  

    பலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. பணிக்குழுவில் இலங்கை குறித்தும் ஆரா

  • இறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா ஆட்டமிழப்பு!  

    இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில்


#Tags

  • Anura Kumara Dissanayaka
  • Kuruwitta
  • Sri lanka
  • அநுர குமார திசாநாயக்க
  • இலங்கை
  • குருவிட்ட
    பிந்திய செய்திகள்
  • மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
    மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
  • வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
    வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
  • உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
    உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
  • நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
    நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
  • பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ் தலைமைகள் ஆதரவு
    பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ் தலைமைகள் ஆதரவு
  • முதலாவது ரோபோ முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றி!
    முதலாவது ரோபோ முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றி!
  • அமெரிக்காவில் உருவாகும் தனுஷ் – சுப்புராஜ் படம்
    அமெரிக்காவில் உருவாகும் தனுஷ் – சுப்புராஜ் படம்
  • 7 பேரின் விடுதலையைக் கோரி முதலமைச்சருக்கு நளினி கடிதம்
    7 பேரின் விடுதலையைக் கோரி முதலமைச்சருக்கு நளினி கடிதம்
  • அடிமை எதிர்ப்பு அமைப்பின் புதிய ஆணையாளராக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி
    அடிமை எதிர்ப்பு அமைப்பின் புதிய ஆணையாளராக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி
  • வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி ஆந்திராவுக்குள் நுழைய கூடாது: சந்திரபாபு நாயுடு
    வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி ஆந்திராவுக்குள் நுழைய கூடாது: சந்திரபாபு நாயுடு
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.