வவுனியாவின் அரச அலுவலகங்களிலும் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு
In இலங்கை April 23, 2019 10:56 am GMT 0 Comments 2201 by : Yuganthini
தேசிய துக்க தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்டத்திலுள்ள அரச அலுவலகங்களிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
இன்று (செய்வாய்க்கிழமை) காலை 8.30 மணிக்கு 3 நிமிடம் மௌன அஞ்சலியை அனைவரும் செலுத்த வேண்டுமென அரசாங்கம் அறிவித்திருந்தது.
அதற்கமைய வவுனியா மாவட்டத்திலுள்ள மாவட்டச்செயலகம், வவுனியா பிரதேச செயலகம் உட்பட அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
குறிப்பாக வவுனியா மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் ஐ.எம்.கனீபா தலைமையிலும் வவுனியா பிரதேச செயலகத்திலும் கா.உதயராசா தலைமையிலும் இந்நிகழ்வுகள் இடம்பெற்றிருந்ததுடன், வெடிகுண்டு சம்பவத்தில் உயிர்நீத்தவர்களிற்காக மூன்று நிமிட மௌன அஞ்சலியும், அஞ்சலி உரைகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.