வவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி தீவிர பாதுகாப்பு
In இலங்கை April 22, 2019 8:03 am GMT 0 Comments 2255 by : Yuganthini

வவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிகழ்ந்த தொடர் குண்டுத் தாக்குதலை தொடர்ந்தே வவுனியாவிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்கள் ஆகியவற்றை சுற்றி பெருமளவான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் நேற்று கிறிஸ்தவ தேவாலயங்கள், ஹோட்டல்கள் மற்றும் ஏனைய இடங்கள் என எட்டு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதுடன் பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றும் இராணுவத்தினரும் பொலிஸாரும் வவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.