வவுனியா சாளம்பைக்குளம் பாடசாலை மூடப்பட்டது!

வவுனியா சாளம்பைக்குளம் அல் அக் ஷா முஸ்லிம் பாடசாலையினை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மூடுவதற்கான ஆலோசனை சுகாதார திணைக்கள அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி வரும் 16ஆம் திகதி புதன்கிழமை வரை பாடசாலை மூடப்படுவதாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
வவுனியா சாளம்பைக் குளத்தில் கொழும்பில் இருந்து வருகை தந்த தாயும் மகளும் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை தெரிய வந்துள்ள நிலையில் குறித்த பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது
இந்நிலையிலேயே அப்பகுதியில் உள்ள பாடசாலையையும் மூடுவதற்கு சுகாதாரப்பிரிவு பணித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.