விசாரணைக்கு வருகிறது பா.ஜ.க தலைவர்கள் குறித்த வழக்கு!
In இந்தியா April 30, 2019 3:03 am GMT 0 Comments 2268 by : Krushnamoorthy Dushanthini

பா.ஜ.க தலைவர்களான பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
குறித்த மனுமீதான விசாரணை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பா.ஜ.க தேசிய தலைவரான அமித்ஷா ஆகியோர் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் அமைச்சர் சுஷ்மிதா சார்பில் மனுவொன்று தாக்கால் செய்யப்பட்டது.
குறித்த மனுவில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் மற்றும் பாதுகாப்பு படையினரின் சாதனைகளை பிரசாரங்களின் போது பேசிவருகின்றனர். இது தேர்தல் நடத்தை விதிமீறல் என காங்கிரஸ் கட்சி, தேர்தல் திணைக்களத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்தது. இது குறித்து தேர்தல் திணைக்களம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி நேற்று உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.