விசாவிற்கு விண்ணப்பிப்போர் குறித்து விசேட விசாரணை!

விசாவிற்கு விண்ணப்பிப்போர் குறித்து விசேட விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.
சுற்றுலா விசா வழங்கப்பட்டுள்ள நபர்கள் தொடர்பாகவும் பாதுகாப்பு பிரிவினால் சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தவிர, பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் நாட்டிற்குள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில், விமான நிலையத்தில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
குடிவரவு குடியகல்வு பிரிவினர், சர்வதேச பொலிஸாரிடமிருந்து பயங்கரவாதிகள் தொடர்பான தரவுகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.