News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • சர்வதேச பொறிமுறையூடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – சம்பந்தன்
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • அத்துமீறிய பௌத்த ஊடுறுவல்களைத் தடுக்க நடவடிக்கை – சுரேன் ராகவன்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  1. முகப்பு
  2. இந்தியா
  3. விஜய் மல்லையா விவகாரத்தில் புதிய சர்ச்சை: அருண் ஜெட்லி மறுப்பு

விஜய் மல்லையா விவகாரத்தில் புதிய சர்ச்சை: அருண் ஜெட்லி மறுப்பு

In இந்தியா     September 13, 2018 4:34 am GMT     0 Comments     1717     by : Risha

விஜய் மல்லையாவுடனான சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை எனத் தெரிவித்து, அவரது கருத்திற்கு நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடி குற்றச்சாட்டிற்குள்ளான நிலையில், லண்டனுக்கு தப்பிச் சென்றுள்ள விஜய் மல்லையா, தான் நாட்டை விட்டு செல்லும் முன்னர் நிதி அமைச்சரை சந்தித்து நிலைமையை சரி செய்ய முயற்சித்ததாக குறிப்பிட்டிருந்தார்.

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) முன்னிலையாகியிருந்த மல்லையா ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

அவர் ஆரம்பத்தில் நிதியமைச்சரின் பெயரை குறிப்பிடாத போதிலும், அக்காலப்பகுதியில் அருண் ஜெட்லியே நிதியமைச்சராக இருந்ததனால் புதிய சர்ச்சை கிளம்பியது.

ஆனால், அக்குற்றச்சாட்டை மறுத்த அருண்ஜெட்லி விஜய் மல்லையாவுடன் சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அருண் ஜெட்லியை நாடாளுமன்றத்தில் வைத்து சந்தித்ததாகவும், அதுவொரு உத்தியோகப்பூர்வமற்ற சந்திப்பாக அமைந்திருந்ததாகவும் மல்லையா தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

கிங் பிஷர் நிறுவன உரிமையாளரான தொழிலதிபர் விஜய் மல்லையா, 13 பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் ரூபாய் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று, தற்போது லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார்.

மல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், லண்டனில் உள்ள அவரை நாட்டிற்கு அழைத்துவருவதற்கான முழு முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • உடன்பாடற்ற பிரெக்ஸிற் இருதரப்பினருக்கும் பாதகமானது : ஹம்மண்ட்  

    பிரித்தானியாவின் பொருளாதாரத்துக்கு கடுமையான வீழ்ச்சியைக் கொடுக்கக்கூடிய உடன்பாடற்ற பிரெக்ஸிற், பிரித

  • முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்  

    முத்தலாக் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூற

  • கடினமான பிரெக்ஸிற்றை எதிர்கொள்ள தயார்: ஜேர்மன்  

    கடினமான பிரெக்ஸிற்றை எதிர்கொள்ளவும் தயார் என ஜேர்மன் நிதி அமைச்சர் ஒலஃப் ஸ்கொல்ஸ் (ழுடயக ளுஉhழடண) தெ

  • ஹெலிகொப்டர் ஊழல் வழக்கு: விஜய் மல்லையாவுக்கு தொடர்பு?  

    ஹெலிகொப்டர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இடைத்தரகர் தீபக் தல்வார்க்கும் தொழிலதிபர் விஜய் மல்லை

  • இந்தியாவிடம் விஜய் மல்லையாவை ஒப்படைக்க பிரித்தானியா அனுமதி  

    வங்கிக்கடன் மோசடி உள்ளிட்ட நிதிமோசடிகள் தொடர்பான வழக்கில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக தொழிலதிபர் விஜய


#Tags

  • Arun Jaitley
  • Finance Minister
  • Vijay Mallya
  • அருண் ஜெட்லி
  • நிதியமைச்சர்
  • விஜய் மல்லையா
    பிந்திய செய்திகள்
  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
    ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
    அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
    தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  • அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
    அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
    Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
    LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
    யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  • ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
    ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
  • தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
    தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.