News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு இணக்கம்?
  • காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு கோரும் வழக்கு  விசாரணை!
  • சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!
  • காலநிலை மாற்றம் குறித்த பொதுமக்களின் அறியாமை அபத்தமானது: சுவீடன் மாணவி
  • தர்மபுரத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு
  1. முகப்பு
  2. ஆசிரியர் தெரிவு
  3. விடுதலைப் புலிகளின் ஆயுதங்களையே பலர் பயன்படுத்தி வருகின்றனர் – அம்பலப்படுத்தினார் கோட்டா

விடுதலைப் புலிகளின் ஆயுதங்களையே பலர் பயன்படுத்தி வருகின்றனர் – அம்பலப்படுத்தினார் கோட்டா

In ஆசிரியர் தெரிவு     October 19, 2018 1:50 pm GMT     0 Comments     1593     by : ஜெயச்சந்திரன் விதுஷன்

விடுதலைப் புலி இயக்கத்திற்காக கொண்டுவரப்பட்ட ஆயுதங்களைப் பலர் பெற்றுக் கொண்டுள்ளதுடன், அந்த ஆயுதங்களையே, பாதாள உலகக் குழுவினர் பயன்படுத்தி வருவதாகவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் மீண்டும் விஷேட மேல் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஷ நினைவு நூதனசாலை நிர்மாணத்தில், 33 மில்லியன் ரூபாய் முறைக்கேடு செய்யப்பட்டமை உட்பட ஏழு குற்றச்சாட்டுகள் குறித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்றைய வழக்கு விசாரணை இடம்பெற்றது.

குறித்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ஷவிடம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டமை குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த கோட்டா, விடுதலைப் புலி இயக்கத்திற்காக கொண்டுவரப்பட்ட ஆயுதங்களைப் பலர் பெற்றுக் கொண்டுள்ளதாகவும், அந்த ஆயுதங்களையே, பாதாள உலகக் குழுவினர் பயன்படுத்தி வருவதாகவும் கூறினார்.

இந்த விடயம் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கோட்டாபய ராஜபக்ஷ கடந்த செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி முதன் முறையாக மூன்று நிதிபதிகளைக் கொண்ட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றில் முன்னிலையானமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • 250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!  

    யாழ்ப்பாணத்தில் 250 மில்லியன் ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப விருத்திக்கான தகவல் பேணும் வர்த்தக மை

  • வியட்நாம் பிரஜைகள் ஐவர் கட்டுநாயக்கவில் கைது!  

    வியட்நாம் பிரஜைகள் ஐவர் இன்று (புதன்கிழமை) பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர

  • சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை – ஜனாதிபதி  

    சிறுவர்கள் பாதுகாப்பு தொடர்பான தேசிய நோக்கத்தை எதிர்வரும் சில வாரங்களுக்குள் ஏற்படுத்தவுள்ளதாக ஜனாதி

  • 2019 வரவு செலவுத் திட்டம் மக்களை ஏமாற்றும் – ரோஹித்த  

    அரசாங்கம் 2019 வரவு – செலவு திட்ட முன்மொழிவு மூலம் மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றது என ஸ்ரீலங்கா

  • ஓர் மதம், ஓர் இனத்திற்கான முன்னுரிமையை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை – மனோ!  

    ஒருநாடு என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டதால் ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் மட்டுமே இங்கு முன்னுரிமை எ


#Tags

  • Colombo
  • Gotabaya Rajapaksa
    பிந்திய செய்திகள்
  • காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு கோரும் வழக்கு  விசாரணை!
    காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு கோரும் வழக்கு  விசாரணை!
  • காலநிலை மாற்றம் குறித்த பொதுமக்களின் அறியாமை அபத்தமானது: சுவீடன் மாணவி
    காலநிலை மாற்றம் குறித்த பொதுமக்களின் அறியாமை அபத்தமானது: சுவீடன் மாணவி
  • தர்மபுரத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு
    தர்மபுரத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு
  • புதிய அரசியல் கூட்டணி ஆரம்பிப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல்
    புதிய அரசியல் கூட்டணி ஆரம்பிப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல்
  • போதைப்பொருள் பயன்பாடு: கிரியெல்ல தலைமையில் குழு ஆய்வு
    போதைப்பொருள் பயன்பாடு: கிரியெல்ல தலைமையில் குழு ஆய்வு
  • கோட்டாபய ராஜபக்ஷவே யுத்தக் குற்றத்துக்கு காரணம்: சரத் பொன்சேகா
    கோட்டாபய ராஜபக்ஷவே யுத்தக் குற்றத்துக்கு காரணம்: சரத் பொன்சேகா
  • மஹிந்த – மைத்திரி தலைமையில் புதிய கூட்டணி உதயம்?
    மஹிந்த – மைத்திரி தலைமையில் புதிய கூட்டணி உதயம்?
  • அணு ஆயுதக்களைவு தொடர்பாக இலங்கை முன்மொழிவு!
    அணு ஆயுதக்களைவு தொடர்பாக இலங்கை முன்மொழிவு!
  • ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: ஜெரெமி கோர்பின்
    ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: ஜெரெமி கோர்பின்
  • மைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா
    மைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.