விமான நிலையத்திற்குச் செல்ல அனுமதி மறுப்பு
In இலங்கை April 21, 2019 7:23 am GMT 0 Comments 1583 by : Dhackshala
கொழும்பிலும் நாட்டின் பல இடங்களிலும் இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களையடுத்து வெளிநாட்டிற்குச் செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் 4 மணி நேரத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் பயணிகள் தவிர்ந்த பார்வையாளர்களுக்கு விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் கட்டுநாயக்க விமான நிலையதில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.