விவசாயிகளின் போராட்டம் குறித்து மாநிலங்களவையில் 15 மணி நேரம் விவாதம்!
In இந்தியா February 3, 2021 1:25 pm GMT 0 Comments 1373 by : Jeyachandran Vithushan

விவசாயிகளின் போராட்டம் குறித்து மாநிலங்களவையில் 15 மணி நேரம் விவாதம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்கள் குறித்தும், விவசாயிகளின் போராட்டம் குறித்தும் மாநிலங்களவையில் விவாதம் நடத்த வலியுறுத்தி காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அவர்களுடன் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையில், மாநிலங்களவையில் 15 மணி நேரம் விவாதம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.
இதனை அடுத்து மாநிலங்களவையில் பேசிய அவை தலைவர் வெங்கையா நாயுடு, குடியரசு தலைவர் உரை மீதான தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிறகு வேளாண் சட்டங்கள் குறித்து உறுப்பினர்கள் பேசலாம் என அறிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.