வீதி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு
In இலங்கை January 15, 2019 11:06 am GMT 0 Comments 1330 by : Dhackshala

பொலொன்னறுவை தலுகான எனும் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் 17 மற்றும் 18 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் வாகனம் மோதியதில் இளைஞர்கள் இருவரும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனம் தப்பிச் சென்றுள்ளதாக அங்கிருந்தோர் தகவல் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொலொன்னறுவை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் தற்போது வரையில் அடையானம் காணப்படாத நிலையில் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.