வெலிகந்த முஸ்லிம் கிராமத்திலிருந்து கண்ணிவெடிகள் கண்டெடுப்பு
பொலனறுவை மாவட்டம் வெலிகந்த மகாவலிதென்ன முஸ்லிம் கிராமத்திலிருந்து இரு கண்ணிவெடிகள் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் உள்ள நீர் வழங்கல் திட்ட பிரிவை அண்மித்த பகுதியில் குறித்த கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனை அவதானித்த நீர் வழங்கல் பிரிவின் ஊழியர் சம்பவம் தொடர்பாக வெலிகந்த பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் குண்டுகளை செயலிழக்கச் செய்வதற்கு பொலிஸார் இராணுவத்தினரின் உதவியை நாடியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.