வெளிநாடுகளிலிருந்து மேலும் 109 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

வெளிநாடுகளிலிருந்து மேலும் 109 இலங்கையர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.
கட்டாரில் இருந்து 28 பேரும், அவுஸ்ரேலியாவில் இருந்து 44 பேரும், ஜப்பானில் இருந்து 37 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
அத்துடன், ஜேர்மனி, மாலைத்தீவுகள், இத்தாலி மற்றும் பங்களாதேஷிலிருந்து மேலும் சிலர் நாட்டுக்கு வருகைதரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.