வெளிநாடுகளில் சிக்கத் தவித்த மேலும் 116 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
In இலங்கை November 26, 2020 3:19 am GMT 0 Comments 1462 by : Dhackshala

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 116 இலங்கையர்கள் இன்று (வியாழக்கிழமை) காலை நாட்டை வந்தடைந்தனர்.
அதன்படி இன்று அதிகாலை 12 மணியளவில் 42 இலங்கையர்கள் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அத்துடன் கட்டார் தோஹாவிலிருந்து 39 இலங்கையர்களும் ஓமான், மஸ்கட்டிலிருந்து 35 இலங்கையர்களும் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இவ்வாறு விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளுக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.