வெள்ளத்தில் மூழ்கியது கியூபெக் – ஒருவர் உயிரிழப்பு
கனடாவின் கியூபெக் நகரில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் சுமார் ஆயிரம் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
கடந்த சில நாட்களாக பெய்த மழையால் கியூபெக் முழுவதும் வெள்ளக்காடாகியுள்ளது. குறிப்பாக நேற்றுமுன்தினம் வெள்ளப் பிரதேசத்தில் காரில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கனேடிய படையினர் சுமார் 200 பேர்வரை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஆறுகள் மற்றும் கால்வாய்களில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் மக்கள் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
எவ்வாறாயினும், வெள்ளம் இம்மாத இறுதிக்குள் வடியும் என்று வானிலையாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.