வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் : விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை!
In இந்தியா December 1, 2020 4:37 am GMT 0 Comments 1352 by : Krushnamoorthy Dushanthini

வேளாண் சட்டங்களை நீக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
பஞ்சாப் ஹரியானா ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்து டெல்லியை நோக்கி அணி வகுத்துள்ள பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் 6வது நாளாக கடும் குளிருக்கும் மத்தியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகள் போராட்டத்தை முடிவுக் கொண்டு வர மத்திய அமைச்சர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். பா.ஜ.கவின் தலைவர்கள் சிலர் இரண்டாவது நாளாக விவாதங்களை முன்னெடுத்திருந்த நிலையில், விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை நியமித்துள்ளனர்.
இந்நிலையில், விவசாயிகள் கொரோனா மற்றும் குளிரில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளதுடன், மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், டெல்லி விக்யான் பவனில் இன்று பிற்பகல் 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரின் அழைப்பை ஏற்பது குறித்து இன்று தங்களுக்குள் பேசி முடிவெடுக்க இருப்பதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.