வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றால்தான் வீட்டுக்குச் செல்வோம்- விவசாயிகள் அறிவிப்பு

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றால்தான் போராட்டத்தை முடித்து வீட்டுக்குச் செல்வோம் என மத்திய அரசிடம் விவசாயிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தேச நலனைக் கருத்தில் கொண்டு முடிவு எடுங்கள் என மத்திய அரசு சார்பில் விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 40 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இதுவரை 50இற்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்கங்களுக்கும் இடையே இன்று எட்டாவது கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
எனினும், இந்தப் பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.