வேளாண் சட்டங்கள் குறித்த இறுதி பேச்சுவார்த்தை இன்று!
In இந்தியா January 15, 2021 3:22 am GMT 0 Comments 1382 by : Krushnamoorthy Dushanthini

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 19 ஆம் திகதி உச்சநீதிமன்றம் அமைத்த குழு தன் முதல்கூட்டத்தைக் கூட்ட உள்ள நிலையில் அரசுடன் விவசாயிகள் நடத்தும் கடைசிப் பேச்சுவார்த்தை இதுவாகும்.
இந்நிலையில் நம்பிக்கையின்றி இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்ளப் போவதாக விவசாயிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த எட்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் விவசாயிகளின் கோரிக்கையான வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது,
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.