வேளாண் சட்டங்கள் : விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கும் அமெரிக்க பிரபலங்கள்!
In இந்தியா February 3, 2021 5:48 am GMT 0 Comments 1302 by : Krushnamoorthy Dushanthini

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைப் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்திய விவசாயிகளுக்கு கிரேட்டா துன்பெர்க், அமெரிக்க பாடகி ரிஹானா ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் கிரேட்டா துன்பர்க் தனது ருவிட்டர் பக்கத்தில், இந்தியாவில் போராடி வரும் விவசாயிகளுடன் நாங்கள் இணைந்து நிற்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
இதுபோலவே அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற பாடகி ரிஹானா, விவசாயிகள் போராடி வரும் பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக வெளியான செய்தியை தனது ருவிட்டர் பக்கத்தில் இணைத்து இது குறித்து ஏன் நாம் பேசவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய 3 வேளாண் சட்டங்களை எதிா்த்து டெல்லி எல்லைகளில் சிங்கு, திக்ரி, ஹாஜிபூா் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டா் பேரணியில் ஏற்பட்ட வன்முறையால் ஏராளமான விவசாயிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து போராடி வரும் விவசாயிகள் குவிந்திருக்கும் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை மத்திய அரசு வலுப்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.