வைத்தியசாலைகளில் நிலவும் பதவி வெற்றிடங்களை நிரப்ப தீர்மானம்!

கடந்த வருடங்களாக வைத்தியசாலைகளில் நிலவும் வைத்தியசாலை நிர்வாகப் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சுனில் டி அல்விஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது நாடளாவிய ரீதியில் வைத்தியசாலை நிர்வாக சேவையில் 145 வெற்றிடங்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அதிகாரிகளை நியமிப்பது தொடர்பில் வைத்தியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டதையடுத்து, தற்போது நேர்முகப்பரீட்சைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், நேர்முகப்பரீட்சையை அடுத்து தகுதியானவர்களின் ஆவணங்களை பொது சேவைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பியதன் பின்னர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.