வைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு சுற்றித் திரிந்த யுவதி
In இப்படியும் நடக்கிறது April 18, 2019 1:17 pm GMT 0 Comments 6542 by : Litharsan

எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு சுற்றித் திரிந்த யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி வைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு நோயளர்களுடன் இணைந்து இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதற்கமைய அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காலி-பிலான பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி எல்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.