News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
  • லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. வைத்தியர் மீது தாக்குதல்: மன்னாரில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

வைத்தியர் மீது தாக்குதல்: மன்னாரில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

In இலங்கை     September 6, 2018 6:57 am GMT     0 Comments     2158     by : Risha

மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (வியாழக்கிழமை) ஒருநாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மன்னார் பொது வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் மீது இன்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதனை கண்டித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கர்ப்பிணி தாயொருவர் மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பிரசவித்துள்ளார். எனினும் குறித்த குழந்தை மருத்துவ காரணங்களினால் இறந்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை வைத்தியசாலைக்கு வந்த குறித்த பெண்ணின் கணவரும் உறவினர் ஒருவரும் பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்திய அதிகாரியை தாக்கியதுடன், பாதுகாப்பு உத்தியோகத்தரையும் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த இருவரையும் மன்னார் பொலிஸார் உடனடியாக கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த தாக்குதலை கண்டித்து காலை 8 மணிமுதல் வைத்தியர்கள் ஒருநாள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் வைத்தியசாலைக்கு வரும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவசர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை, இன்று காலை மன்னார் வைத்தியசாலைக்கு சென்ற வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் குறித்த விடயம் தொடர்பாக வைத்தியசாலையின் பணிப்பாளர், உதவி பணிப்பாளர் மற்றும் வைத்தியர்களுடன் அவசர கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • மன்னார் மனித எச்சம் – கார்பன் அறிக்கை வெளியிடப்படாமைக்கான காரணம்!  

    மன்னார் மனித எச்சங்களின் ஆறாவது மாதிரியிலிருந்து போதிய அளவான மரபணு பொருட்களைப் பிரித்தெடுப்பதில் தாம

  • மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு  

    மன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி 149 ஆவது

  • மனித எச்சங்களின் கார்பன் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு (2ஆம் இணைப்பு)  

    மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் தொடர்பான கார்பன் அறிக்கை மன்ன

  • கார்பன் பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு?  

    மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் கார்பன் பரிசோதனை அறிக்கையை மன்னார் நீதிமன்றத்

  • பெக்கோ வாகனத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு  

    மன்னார்  2 ஆம் கட்டை பகுதியில் உள்ள புதிய குடியிறுப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்


#Tags

  • doctors
  • General Hospital
  • mannar
  • strike
  • பணிப்புறக்கணிப்பு
  • பொது வைத்தியசாலை
  • மன்னார்
  • வைத்தியர்கள்
    பிந்திய செய்திகள்
  • மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
    மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
  • லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
    லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
    விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
    இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
    முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  • நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
    நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
  • அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
    அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
  • ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
    ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
  • பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
  • ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
    ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.