இடைநிறுத்தப்பட்ட வெளிநாட்டு உதவிகளை பெற பேச்சுவார்த்தை – நிதி இராஜாங்க அமைச்சர்
In இலங்கை December 23, 2018 2:33 am GMT 0 Comments 1261 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

கடந்த 26 ஆம் திகதிக்கு பின்னர் அரசியல் ஸ்திரமற்ற நிலையை அடுத்து இலங்கைக்கு வழங்கவிருந்த நிதி உதவிகள் பல இடைநிறுத்தப்பட்டன. அவ்வாறு இடைநிறுத்தப்பட்ட அனைத்து வெளிநாட்டு நிதி உதவிகளையும் பெற்றுக்கொள்வது தொடர்பாக ஜனவரி மாதம் பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ஏரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில்-
“சர்வதேச நாணய நிதியம், அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனம் மற்றும் ஜப்பானின் அனைத்துலக ஒத்துழைப்பு முகவரகம் ஆகியவற்றுடனேயே பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் 1.5 பில்லியன் ரூபாய் கடனின், ஆறாவது தவணைக் கொடுப்பனவான 250 மில்லியன் டொலரை இடைநிறுத்தி வைத்துள்ளது.
அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனம் 480 மில்லியன் டொலர் உதவியை நிறுத்தி வைத்துள்ளது. ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகம் 1.7 பில்லியன் டொலர் இலகு தொடருந்து திட்டத்துக்கான உதவியை இடைநிறுத்தியுள்ளது.
இந்த நிதி உதவிகளை விரைவாக மீளப் பெற்றுக்கொள்வது தொடர்பாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஜனவரி மாதம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.