ஸ்மித்தை மன்னிக்க வேண்டும் – மைக்கல் கிளார்க்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித்தை மன்னிக்க வேண்டும் என அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டியின் போது கமருன் பான்கிராப் (Cameron Bancroft) பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும், இந்த விடயத்தில் ஸ்மித்திற்காக வருந்துகிறேன் எனக் குறிப்பிட்ட கிளார்க், எவ்வாறாயினும் அவர் செய்த இந்தச் செயல் எந்த விதத்திலும் நியாயமானது இல்லை எனவும் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வீரர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனச் சுட்டிக்காட்டிய அவர், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு விட்டது எனினும் ஸ்மித்தை மன்னிக்க வேண்டும் எனவும், எதிர்காலத்தில் நேர்மையான கிரிக்கெட்டை கொண்டுவரும் பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கிளார்க் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.