ஸ்லோவாகியாவில் கொவிட்-19 தொற்றினால் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஸ்லோவாகியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்லோவாகியாவில் மூவாயிரத்து 7பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 51ஆவது நாடாக விளங்கும் ஸ்லோவாகியாவில் இதுவரை மொத்தமாக இரண்டு இலட்சத்து ஒன்பதாயிரத்து 69பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 860பேர் பாதிக்கப்பட்டதோடு 89பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 55ஆயிரத்து 823பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 479பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 50ஆயிரத்து 239பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.