ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு சுகபோக வாழ்க்கையை வழங்குவதாக சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.
பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே எதிர்கட்சித் தலைவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தோட்டத் தொழிலாளர்கள் பல அநீதிகளை எதிர்நோக்கி வருவதாகவும், வாக்குறுதி வாங்கியபடி இன்று வரை 1000 ரூபாய் நாளாந்த சம்பளம் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
எனவே ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் தோட்டத் தொழிலாளர்கள் முதலாளிகளுக்கு என்றென்றும் கட்டுப்பட மாட்டார்கள் என பிரேமதாச கூறினார்.
சிறிய தோட்ட உரிமையாளர்களுக்கு காணி உரிமையை வழங்குவதாக சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.
மேலும் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கும் சிறிய தேயிலை தோட்டங்களில் தோட்டத் தொழிலாளர்களை பங்குதாரர்களாக மாற்றுவேன் என்றும் உறுதியளித்தார்.