09 மில்லியன் மக்களுக்கு செலுத்தும் வகையில் 18 மில்லியன் டோஸ் தடுப்பூசி இலங்கைக்கு வருகிறது!
In இலங்கை February 8, 2021 11:10 am GMT 0 Comments 1513 by : Jeyachandran Vithushan

09 மில்லியன் மக்களுக்கு செலுத்தும் வகையில் 18 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசி அரசாங்கத்தால் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கோவக்ஸ் திட்டத்தின் மூலம் முதல் தொகுதி தடுப்பூசிகள் பெப்ரவரி இறுதிக்குள் இலங்கையை வந்தடையும் என பொது சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மார்ச் முதலாம் திகதி தொடக்கம் நாடளாவிய ரீதியில் 4,000 மத்திய நிலையங்களில் தடுப்பூசியை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா ஒழிப்பு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.
சுகாதார அமைச்சில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர், 30 தொடக்கம் 60 வயதுக்கிடைப்பட்ட தொழில் செய்யும் அனைத்து பிரஜைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அந்தவகையில் நாடு முழுவதும் அமைக்கப்படும் ஒவ்வொரு தடுப்பூசி மத்திய நிலையம் ஊடக தினமும் 300 பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.