13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர் சோதனைகள் நேற்று முன்னெடுப்பு
In இலங்கை December 14, 2020 6:57 am GMT 0 Comments 1410 by : Jeyachandran Vithushan

கொரோனா தொற்று நோயாளிகளை அடையாளம் காண இலங்கையில் நேற்று மட்டும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி, 13 ஆயிரத்து 479 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதனை அடுத்து நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மொத்த பி.சி.ஆர். பரிசோதனைகள் எண்ணிக்கை 10 இலட்சத்து 17 ஆயிரத்து 672 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று 15 ஆயிரத்து 239 சோதனைகள் நடத்தியதை அடுத்து நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பிரிசோதனைகளின் எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.