80 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது!

80 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு தழுவிய மிகப்பெரிய கொரோனா 9 தடுப்பு மருந்து வழங்கல் திட்டம் ஒரு மாதமாக நடைபெறுகின்றது.
சுகாதாரம் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு நேற்று மாலை 6 மணி வரை 80 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டு இருக்கின்றது.
தடுப்பு மருந்து வழங்கலின் இரண்டாவது கட்டம் நேற்று தொடங்கியது. முதல் கட்டத்தில் தடுப்பு மருந்து பெற்று 28 நாட்கள் நிறைவு செய்தவர்களுக்கு இரண்டாம் கட்டத்தில் தடுப்பூசி போடப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.