9 கோடி விவசாயிகளுக்கு 18 கோடி நிதி வழங்குகிறார் பிரதமர்!
In இந்தியா December 24, 2020 8:55 am GMT 0 Comments 1455 by : Krushnamoorthy Dushanthini

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி சுமார் 9 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவியை பிரதமர் நரேந்திர மோடி நாளை (வெள்ளிக்கிழமை) வழங்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மோடி விவசாயிகளுடன் காணொலி மூலமும் உரையாடவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
புதிய சட்டங்கள், புதிய வேளாண் சட்டங்கள், விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சுமார் ஒரு மாதமாக டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பிரதமரின் இந்த உரையாடல் முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.