பயங்கரவாத தடைச்சட்டம் தமிழ் மக்களை ஒடுக்கும் செயல்: சாள்ஸ் நிர்மலநாதன்

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருப்பது தமிழ் மக்களை ஒடுக்கும் செயலாக தான் பார்ப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற, வரவு செலவுத் திட்டத்தில் நீதியமைச்சுக்கான ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு யுத்ததை நிறைவு செய்த போதிலும், அரசாங்கம் தொடர்ச்சியாக இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை அமுலில் வைத்து தமிழ் மக்களை ஒடுக்கியிருந்தது எனவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
இலங்கையில் தொடர்ச்சியாக பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இருப்பதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்வதற்கு அச்சப்படுகின்றார்கள் எனவும் சாள்ஸ் நிர்மலநாதன் கூறினார்.