இந்து ஸ்வயம் சேவக சங்கம் நடத்தும் பண்புப் பயிற்சி முகாம்!

பண்புப் பயிற்சி முகாம் மட்டக்களப்பு காமாட்சி அம்மன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள கருணாலயம் மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் தலைவர் ஏ.ரவீந்திரன் தலைமையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பயிற்சி முகாம் 15 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி முகாம் விசேட கணபதி வேள்வியுடன் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் எம். உதயகுமார் விஷ்வ இந்து பறிஷத் அமைப்பின் சர்வதேச செயலாளர் சுவாமி விக்ஞானாந்தா ஆகியோர் விசேட அதிதியாக கலந்து கொண்டனர்.
இதன்போது தியானம், யோகாசனம், மனவலிமை, போன்ற பல்வேறு விடயங்கள் பயிற்றுவிக்கப்படுவதுடன் சிறப்புரையினை சுவாமி விக்ஞானாந்தா நிகழ்த்தியிருந்தார்.
இது போன்ற பயிற்சி முகாமானது பல நாடுகளில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுவுள்ள நிலையில், முதற் முறையாக இலங்கையின் மட்டக்களப்பில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.