முத்தலாக் வழக்குத் தொடுத்த இஷ்ரத் ஜஹான் பா.ஜ.க.வில் இணைவு!

முத்தலாக் வழக்கு தொடுத்தவர்களில் ஒருவரான இஷ்ரத் ஜஹான் மேற்கு வங்காள மாநிலத் தலைநகர் கொல்கொத்தாவில் வைத்து பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
இதனை மாநில பா.ஜ.க. பொதுச் செயலாளர் சயந்தன் பாசு இஷ்ரத் ஜஹான், ஹவுரா நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் இணைந்துள்ளார் என உறுதிப்படுத்தியுள்ளார்.
மேற்கு வங்காளத்தின் கோலாபாரி பகுதியில் வசித்து வருபவர் இஷ்ரத் ஜஹான் என்ற பெண்மணி. இவரது கணவர் துபாயில் வசித்து வருவதுடன் தனது மனைவிக்கு தொலைபேசி மூலம் முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்துவிட்டார்.
இதையடுத்து, இஷ்ரத் ஜஹான் முத்தலாக்கை எதிர்த்து உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். ஏற்கனவே 4 பேர் முத்தலாக் தொடர்பாக வழக்கு தொடுத்திருந்தனர். இவர்கள் அனைவரது வழக்குகளையும் 5 பேர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது.
விசாரணை முடிந்ததைத் தொடர்ந்து, முத்தலாக் நடைமுறைக்கு ஆறு மாதங்கள் இடைக்காலத் தடை விதித்து கடந்த ஓகஸ்ட் மாதம் உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பு அளித்தமை குறிப்பிடத்தக்கது.