News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • டெல்லியில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
  • நிபந்தனையின்றி இந்தியாவுக்கு உதவ தயார் – இஸ்ரேல்
  • சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
  • முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
  • மாகாண சபைத் தேர்தல் குறித்து முக்கிய கூட்டம்
  1. முகப்பு
  2. திரை விமர்சனம்
  3. குலேபகாவலி எப்படி?

குலேபகாவலி எப்படி?

In திரை விமர்சனம்     January 18, 2018 7:06 am GMT     0 Comments     2442     by : Vithushagan

சாமி சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துவரும் மன்சூர் அலிகானிடம் நாயகன் பிரபுதேவாவும், யோகி பாபுவும் வேலை செய்து வருகிறார்கள்.

தாய், தந்தை இல்லாமல், தங்கையுடன் வாழ்ந்து வரும் ஹன்சிகா, இரவு நேரங்களில் மாடர்னாக பப்புக்கு சென்று அங்குள்ள இளைஞர்களிடம் இருக்கும் பணம் உள்ளிட்ட பொருட்களை திருடி வருகிறார். இதுபோல் பலரிடம் லாவகமாக பேசி காரை திருடி வருகிறார் ரேவதி.

மற்றொரு புறம் கேங்ஸ்டராக இருக்கும் ஆனந்த் ராஜ், அவரது உறவினர் மதுசூதனன் மூலம் ஆங்கிலேயர்களிடம் இருந்து பதுக்கப்பட்ட வைரங்கள், குலேபகாவலி என்ற கிராமத்தில் இருப்பதாக அறிகிறார். இந்த வைரங்களை எடுக்க ஹன்சிகாவின் தங்கையை பணயக் கைதியாக வைத்து, ஹன்சிகாவை எடுத்து வர சொல்கிறார்.

இதற்கு சம்மதம் தெரிவித்து, ஹன்சிகாவும் அவரது காதலர் பிரபுதேவாவும், ஆனந்த்ராஜின் உதவியாளரான முனிஸ்காந்த்தும் அந்த ஊருக்கு பயணிக்கிறார்கள். வைரங்கள் இருப்பதை தெரிந்துக் கொண்ட ரேவதியும் அந்த கிராமத்திற்கு செல்கிறார்.

இவர்களால் பாதிக்கப்பட்ட  பொலிஸ் அதிகாரி சத்யன், இந்த கும்பலை பிடிக்க முயற்சி செய்கிறார்.

இறுதியில் அந்த வைரங்கள் பிரபுதேவா, ஹன்சிகாவிடம் கிடைத்ததா? போலீஸ் அதிகாரி சத்யன் இவர்களை பிடித்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் பிரபுதேவா, இளமை துள்ளலுடன் நடித்திருக்கிறார். நடனம், நகைச்சுவை, முக பாவனைகள் அனைத்திலும் நடிப்பால் கவர்ந்திருக்கிறார். பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த அதே பிரபுதேவாவை இப்படத்தில் பார்க்க முடிகிறது.

நாயகியாக நடித்திருக்கும் ஹன்சிகா, கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். மாடர்ன் பெண்ணாகவும், தங்கைக்காக ஏங்குவதும் என நடிப்பில் பளிச்சிடுகிறார். வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று மனதில் நிற்கிறார் ரேவதி. மன்சூர் அலிகான், ஆனந்த் ராஜ், முனிஸ்காந்த், யோகிபாபு, சத்யன் ஆகியோர் கொடுத்த வேலையை அவர்களுக்கு உரிய பாணியில் நடித்து கைத்தட்டல் பெற்றிருக்கின்றனர்.

முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கல்யாண். கதாபாத்திரங்கள் தேர்விலே முதல் வெற்றியை பெற்றிருக்கிறார். மேலும், அவர்களிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். முழுநீள நகைச்சுவை என்றாலும் முழுவதும் ரசிக்க முடியவில்லை. ஒரு சில இடங்களில் நகைச்சுவை பெரியதாக எடுபடவில்லை என்றே சொல்லலாம்.

ஆனந்த் குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் புத்துணர்வுடன் இருக்கிறது. அதுபோல், மெர்வின் சாலமன், விவேக் சிவா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். இசையும், ஒளிப்பதிவும் கதையின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • சிவகார்த்திகேயனின் ‘Mr.லோக்கல்’ வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!  

    ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகிவரும் ‘Mr.லோக்கல்’ திரைப்படத்தின்

  • ‘மங்காத்தா-2’ படத்தை இயக்க பயமாகவுள்ளது – வெங்கட்பிரபு  

    அஜித் நடித்து வெளியான மங்காத்தா படத்தின் 2ஆம் பாகமான ‘மங்காத்தா 2’ படத்துக்கு இரசிகர்களி

  • தமிழ்நாட்டு மாப்பிள்ளை கிடைத்தால் திருமணம் – தமன்னா  

    தமிழ்நாட்டில் மாப்பிள்ளை கிடைத்தால் திருமணம் செய்துகொள்ள தயாராகவுள்ளதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார

  • எனக்கான காதலனுக்காக காத்திருக்கிறேன்! – ஐஸ்வர்யா ராஜேஷ்  

    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய காதல் எல்லாமே தோல்வியில்தான் முடிந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். அத

  • ஜெயம் ரவியின் 24ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு  

    அடங்கமறு திரைப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில் தனிஒருவன்


#Tags

  • Hansika
  • Mansor Aligan
  • Movie
  • sell
  • திரைப்படம்
  • மன்சூர் அலிகான்
  • விற்பனை
  • ஹன்சிகா
    பிந்திய செய்திகள்
  • சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
    சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
  • முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
    முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
  • மாகாண சபைத் தேர்தல் குறித்து முக்கிய கூட்டம்
    மாகாண சபைத் தேர்தல் குறித்து முக்கிய கூட்டம்
  • வடகொரியா மீது அழுத்தம் பிரயோகிக்க போவதில்லை: ஜனாதிபதி ட்ரம்ப்
    வடகொரியா மீது அழுத்தம் பிரயோகிக்க போவதில்லை: ஜனாதிபதி ட்ரம்ப்
  • இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல்
    இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல்
  • பிரான்ஸில் யூத கல்லறைகள் உடைப்பு
    பிரான்ஸில் யூத கல்லறைகள் உடைப்பு
  • யாழில் ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது
    யாழில் ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது
  • இந்தியா – பாகிஸ்தான் பதற்றமான நிலைமை: ஐ.நா கண்டனம்
    இந்தியா – பாகிஸ்தான் பதற்றமான நிலைமை: ஐ.நா கண்டனம்
  • புதிய சட்ட முன்மொழிவுகளை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்வைக்கும்: பிரெக்ஸிற் அமைச்சர்
    புதிய சட்ட முன்மொழிவுகளை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்வைக்கும்: பிரெக்ஸிற் அமைச்சர்
  • புல்வாமா தாக்குதலுடன் பாகிஸ்தான் தொடர்பு!- இந்தியாவிடம் வலுவான ஆதாரங்கள்
    புல்வாமா தாக்குதலுடன் பாகிஸ்தான் தொடர்பு!- இந்தியாவிடம் வலுவான ஆதாரங்கள்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.