News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • டுபாய் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடர்: இரண்டாம் சுற்று போட்டிகளின் முடிவுகள்
  • டெல்லியில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
  • நிபந்தனையின்றி இந்தியாவுக்கு உதவ தயார் – இஸ்ரேல்
  • சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
  • முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
  1. முகப்பு
  2. இன்றைய பார்வை
  3. உண்மையான வெற்றிப்பாதையில் பயணிக்க தேவையானது என்ன?

உண்மையான வெற்றிப்பாதையில் பயணிக்க தேவையானது என்ன?

In இன்றைய பார்வை     January 25, 2018 12:50 pm GMT     0 Comments     1621     by : Risha

பங்களாதேஷில் நடைபெற்றுவருகின்ற மும்முனை கிரிக்கட் தொடரின் ஆரம்பப்போட்டிகளில் அவமானகரமான தோல்விகளைத்தழுவிய இலங்கை அணி கடந்தபோட்டியில் ஸிம்பாப்பேக்கு எதிராகவும் இன்றைய போட்டியில் பங்களாதேஷிற்கு எதிராகவும் வெற்றிகளைக் குவித்து இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இன்றைய போட்டியில் வெற்றிபெற்ற விதமானது மீண்டுமாக பல  இலங்கை ரசிகர்களின் மனதில் நம்பிக்கையைத் துளிர்விடச் செய்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அண்மைய வெற்றிகள் பாராட்டப்படவேண்டியவைதான். ஆனால் கடந்தவருடத்தில் அடைந்த தொடர் தோல்விகளையும் இவ்வருடத்தில் அடைந்த தோல்விகளையும் ஒட்டுமொத்தமாக மறந்துவிட்டு ஆனந்தக்களிப்பில் திளைந்திருந்தால் மீண்டுமாக தோல்விகளில் இந்த அணி துவளும் போது வேதனையிலும் விரக்தியிலும் மூழ்கவேண்டிய நிலை ஏற்படும் என்பதை புரிந்துகொள்வதற்கு நீண்டகாலம் பயணிக்கவேண்டியதில்லை.
கடந்தாண்டில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய அணி விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும்  இலங்கை அணியைத் தோற்கடித்து 9-0 என்ற வெள்ளையடிப்பை மேற்கொண்டிருந்தது. இதன் பின்னர் கடந்தாண்டு இறுதியில் இந்தியாவிற்கு இலங்கையணி விஜயம் மேற்கொண்டிருந்தபோது விளையாடிய முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்திய அணியை இலங்கை அணி படுதோல்வியடையச் செய்திருந்தது. அதன் பின்னர் வந்த போட்டிகளில் இந்திய அணியிடம் தோல்விமேல் தோல்விகளைத் தழுவி ஊடகங்களதும் ரசிகர்களதும் கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் நாடுதிரும்பியது. 
ஒரு போட்டியில் வெற்றிபெற்றுவிட்டால் அனைத்துமே சரியாகிவிட்டதாக கருதிவிடக்கூடாது மாறாக இலங்கை அணி தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவிக்க வேண்டுமாயின் கிரிக்கட் நிர்வாகத்திலும் கிரிக்கட் கட்டமைப்பிலும் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என்ற உண்மை பல்வேறு மட்டங்களிலும் வலியுறுத்தப்பட்டது. 
 
இலங்கை அரசியலிலும் . தகவல் அறியும் உரிமைச்சட்டம் நிறைவேற்றப்பட்டமை  போன்று அவ்வப்போது ஒரிரண்டு முன்னேற்றகரமான செயற்பாடுகள் நடப்பதுண்டு.
இது பாராட்டப்படவேண்டியதே. ஆனால் அரசியல் வாதிகள் எப்படிச் செயற்பட வேண்டும் அதிகாரிகளின் கடமை எப்படியிருக்க வேண்டும் போன்ற விடயங்களில் மாற்றம் வரும் வரையில் இந்த நாட்டை வினைத்திறன்மிக்க வெற்றிநாடாக மாற்றமுடியாது. 
 
சிங்கப்பூர் பிரதமர் இலங்கைக்கு வந்துசென்ற தடம் இன்னமும் சூடாக இருக்கின்ற இந்த நிலையில் இலங்கை சிங்கப்பூரைப் பார்த்து திருந்திக்கொள்ளவேண்டிய விடயங்கள் பல உள்ளன. அந்த நாட்டில் ஒரு கட்டமைப்பு உள்ளது.  அதுவே அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிகோலியது. அங்கு அரசியல்வாதிகளோ அதிகாரிகளோ லஞ்சம் பெறும் கலாச்சாரம் கிடையாது. இதுதொடர்பில் அங்கு கடந்தகாலத்தில் நிறைவேற்றப்பட்ட கடுமையான சட்டங்களும் கொடுக்கப்பட்ட தண்டனைகளுமே இன்றைய நிலைக்கு அந்த நாட்டை உயர்த்துவதற்கு அடித்தளமிட்டன. இலங்கை உண்மையான முன்னேற்றத்தைக் காணவேண்டுமாயின் அவ்வப்போது ஈட்டுகின்ற ஒரிரு வெற்றிகளில் தொங்கிக்கொண்டு புகழ்பாடாமல் அடிப்படைக்கட்டமைப்பில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டும். அப்போதே நின்று நிலைக்கக்கூடிய உண்மையான முன்னேற்றம் இந்த நாட்டில் சாத்தியமாகும். 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையில் கடன் ஒப்பந்தம் கைச்சாத்து  

    இலங்கை அரசாங்கத்துக்கும் – பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் French Agency for Development (AFD) பிர

  • ஜனநாயகத்தை பாதுகாத்த நாடாக இலங்கைக்கு அங்கீகாரம்  

    ஜனநாயகத்தை பாதுகாத்த நாடு என்ற சர்வதேச அங்கீகாரத்தை இலங்கை பெற்றுள்ளதென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவி

  • கனடாவில் இலங்கைத் தமிழர் பொலிஸ் அதிகாரியானார்  

    இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் ஒன்ராரியோ மாநிலத்தில்  றொரன்ரோ மாநகரில் பொலிஸ் உத்தி

  • பங்களாதேஷில் 200 க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை : 8 பேர் உயிரிழப்பு!  

    பங்களாதேஷின் சிட்டகொங் துறைமுகத்தில் உள்ள 200 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து வி

  • பிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்!  

    பிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்த


#Tags

  • #sri Lanka#
  • Bangladesh
  • இலங்கை
  • பங்களாதேஷ்
  • மும்முனை கிரிக்கட்
    பிந்திய செய்திகள்
  • டுபாய் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடர்: இரண்டாம் சுற்று போட்டிகளின் முடிவுகள்
    டுபாய் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடர்: இரண்டாம் சுற்று போட்டிகளின் முடிவுகள்
  • சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
    சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
  • முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
    முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
  • மாகாண சபைத் தேர்தல் குறித்து முக்கிய கூட்டம்
    மாகாண சபைத் தேர்தல் குறித்து முக்கிய கூட்டம்
  • வடகொரியா மீது அழுத்தம் பிரயோகிக்க போவதில்லை: ஜனாதிபதி ட்ரம்ப்
    வடகொரியா மீது அழுத்தம் பிரயோகிக்க போவதில்லை: ஜனாதிபதி ட்ரம்ப்
  • இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல்
    இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல்
  • பிரான்ஸில் யூத கல்லறைகள் உடைப்பு
    பிரான்ஸில் யூத கல்லறைகள் உடைப்பு
  • யாழில் ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது
    யாழில் ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது
  • இந்தியா – பாகிஸ்தான் பதற்றமான நிலைமை: ஐ.நா கண்டனம்
    இந்தியா – பாகிஸ்தான் பதற்றமான நிலைமை: ஐ.நா கண்டனம்
  • புதிய சட்ட முன்மொழிவுகளை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்வைக்கும்: பிரெக்ஸிற் அமைச்சர்
    புதிய சட்ட முன்மொழிவுகளை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்வைக்கும்: பிரெக்ஸிற் அமைச்சர்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.