News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
  • லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  1. முகப்பு
  2. இங்கிலாந்து
  3. பிரெக்சிற் புதிய வாக்கெடுப்பு: லண்டனில் வரலாறு காணாத பேரணி!

பிரெக்சிற் புதிய வாக்கெடுப்பு: லண்டனில் வரலாறு காணாத பேரணி!

In இங்கிலாந்து     October 21, 2018 3:25 am GMT     0 Comments     1671     by : Varshini

பிரெக்சிற் தொடர்பான புதிய வாக்கெடுப்பை வலியுறுத்தி லண்டனில் மிகவும் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

லண்டனிலுள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி நேற்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

பிரித்தானிய வரலாற்றில் பதியப்படும் அளவிற்கு சுமார் 700,000இற்கும் அதிகமான மக்கள் அலையென திரண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.

லண்டன் மேயர் சாதிக்கான் இந்த ஆர்ப்பாட்ட பேரணியை ஆரம்பித்து வைத்து உரையாற்றியதையடுத்து, முக்கிய கட்சிகளின் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

பொதுவாக்கெடுப்பு ஜனநாயகமற்றதென அரசாங்கம் நினைக்கின்றதென குறிப்பிட்ட லண்டன் மேயர் சாதிக்கான், பொது வாக்கெடுப்பே ஜனநாயகத்தை உறுதிப்படுத்துமென குறிப்பிட்டார். பிரித்தானிய மக்களின் கருத்துக்கணிப்பை விட ஒரு உண்மையான ஜனநாயகமும் உண்மையும் இருக்கமுடியாதென அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பிரெக்சிற்றிற்கு ஆதரவான ஆர்ப்பாட்டமொன்றும் நேற்று இடம்பெற்றது. யூகிப் கட்சியின் முன்னாள் தலைவர் நைஜல் பராஜ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதை விரும்பியே ஏற்கனவே மக்கள் வாக்களித்தனர் என்றும் அது இடம்பெறுவதை மக்கள் விரும்புகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதியுடன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலக தீர்மானித்துள்ளது. பிரெக்சிற் தொடர்பான தெளிவுபடுத்தல் குறைவாக இருந்த சந்தர்ப்பத்திலேயே அதற்கு ஆதரவாக வாக்களித்ததாக தற்போது பெருமளவான மக்கள் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில், இறுதிக்கட்ட வாக்கெடுப்பை கோரி அண்மைய காலமாக தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்  

    பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறக்கூடிய பிரெக்ஸிற் ஒப்பந்தமொன்றை ஐரோப்பிய ஒன்றியத்துடன் எட்டுவதற்கா

  • உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான திட்டம் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கிறோம்: கொவேனி  

    உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைச் சமாளிப்பதற்காக ஐரிஷ் அரசாங்கத்தால் தயார்ப்படுத்தப்பட்டுள்ள அவசரகால திட்டம்

  • பிரெக்ஸிற் பிற்போடப்படுவதற்கான சாத்தியமுள்ளது: பார்னியர்  

    ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவது பிற்போடப்படுவதற்கான சாத்தியத்தை நிராகரிக்க முடிய

  • உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கு எதிர்ப்பு : ரோறி உறுப்பினர்கள் பலர் விலகக்கூடும்!  

    உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேலும் பல கொன்சர்வேற்றிவ் உறுப்பினர்கள் கட்சியை வ

  • பிரதமர் மே தனது மூலோபாயத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் : தொழிற்கட்சி  

    உடன்பாடற்ற பிரெக்ஸிற்றின் ஆபத்தை தவிர்ப்பதற்கு பிரதமர் தெரேசா மே தனது மூலோபாயத்தை மாற்றிக்கொள்ள வேண்


#Tags

  • Brexit
  • London mayor Sadiq Khan
  • london protest
  • பிரெக்சிற்
  • லண்டன் மேயர் சாதிக்கான்
    பிந்திய செய்திகள்
  • மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
    மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
  • லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
    லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
    விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
    இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
    முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  • நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
    நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
  • அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
    அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
  • ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
    ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
  • பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
  • ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
    ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.