News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு
  • வடக்கில் எதற்காக அனைத்துலக விமான நிலையம் – ரோஹித கேள்வி
  • ஈஃபிள் கோபுரம் குறித்த சில சுவாரசிய தகவல்கள்!
  • இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது
  • கிழக்கு மாகாண ஆளுநரை சந்திப்பதற்கு அனுமதி மறுப்பு
  1. முகப்பு
  2. வணிகம்
  3. Huawei நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி வீதம் அதிகரிப்பு!

Huawei நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி வீதம் அதிகரிப்பு!

In வணிகம்     January 16, 2019 6:53 am GMT     0 Comments     1808     by : Najee

2018ஆம் ஆண்டில் Huawei இன் விற்பனை வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21வீதம் வளர்ச்சி கண்டு 108.5 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை எட்டவுள்ளது.

Huawei நிறுவனம் கடந்த 2018ஆம் ஆண்டில் 200 மில்லியனுக்கும் மேற்பட்ட ஸ்மார்ட்தொலைபேசிகளை ஏற்றுமதி செய்துள்ளது. சர்வதேச வலையமைப்பு நிறுவனங்களுடன் 5G இற்கான 26 வர்த்தக உடன்படிக்கைகளில் Huawei கைச்சாத்திட்டுள்ளது. உலகளாவில் 10,000 இற்கும் மேற்பட்ட 5G தள மையங்களை ஏற்றுமதி செய்துள்ளது.

மேலும், 160 இற்கும் மேற்பட்ட சர்வதேச நகரங்களில் டிஜிட்டல் மாற்றத்திற்கான பங்காளராக Huawei தெரிவு செய்யப்பட்டுள்ளது. Fortune Global 500 பட்டியலிலுள்ள 211 நிறுவனங்கள் டிஜிட்டல் மாற்றத்திற்கு Huawei இனைத் தெரிவு செய்துள்ளன.

இதேவேளை, தனிப்பட்ட பாவனைக் கணினி (PC) வர்த்தகம் மற்றும் smart homes இற்கான IoT ecosystem ஆகியவற்றைப் பொறுத்தவரையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை நிகழ்த்தியுள்ளது.

Huawei Cloud ஆனது 18 பிரிவுகளில் 140 இற்கும் மேற்பட்ட cloud சேவைகளை ஆரம்பித்துள்ளதுடன், 22 பிராந்தியங்களின் மத்தியில் கிடைக்கப்பெறுகின்ற 37 வலயங்களில் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கான சேவைகளை வழங்குவதற்காக Huawei பங்காளர்களுடன் இணைந்து பணிகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்த ஆண்டில் Huawei இன் செயற்கை நுண்ணறிவு மூலோபாயம் (AI strategy) தொடர்பிலும்  அறிவிப்பை வெளியிட்டுள்ளதுடன், அனைத்து கட்டமைப்புக்களுக்கும் AI திர்வுகளின் முழுமையான ஏற்பாடுகளையும்  அறிமுகப்படுத்தியுள்ளது.

2019ஆம் ஆண்டில் மூலோபாய வர்த்தகங்கள் மற்றும் மூலோபாய வாய்ப்புக்கள் மீது Huawei கவனம் செலுத்தவுள்ளதுடன், இன்னும் அதிக அளவில் மீள்எழுச்சி ஆற்றல் கொண்ட வர்த்தகக் கட்டமைப்பை கட்டியெழுப்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த சில ஆண்டுகளாக போட்டித்திறனை அவ்வளவாகக் கொண்டிராத உற்பத்திகளை அபிவிருத்தி செய்வதை  குறைத்துள்ளது.

மிகவும் எளிமையான வலையமைப்பு கட்டமைப்பினை அபிவிருத்தி செய்து, இணையப் பாதுகாப்பு மற்றும் அந்தரங்கம் பேணல் பாதுகாப்பினை அதியுயர் மட்டத்தில் பேணுவதை உறுதி செய்துள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ஹூவாவி விவகாரம்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கனடா ஆலோசனை!  

    சீனாவின் ஹூவாவி தொலைத்தொடர்பு நிறுவனத்தின் நிதியியல் தலைமை அதிகாரி மெங் வான்சூ தொடர்பான அடுத்தகட்ட ந

  • சீன நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்காவில் குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் பதிவு!  

    உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான சீனாவின் ஹூவாவி நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க ந

  • சீனாவுக்கான கனேடிய தூதுவர் பதவிநீக்கம்!  

    சீனாவிற்கான கனேடிய தூதுவர் ஜோன் மக்கலமை, கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அதிரடியாக பதவிநீக்கியுள்ளார்.

  • கனடா மிகப்பெரிய தவறினை இழைக்கிறது: சீனா காட்டம்!  

    சீன தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாவியின் நிதியியல் தலைமை அதிகாரி மெங் வான்சூவை, அமெரிக்காவிற்கு நாடுகட

  • ஹுவாவி அதிகாரி தன்னைப் பாதுகாத்துக் கொள்ளலாம்: பிரதமர் ட்ரூடோ  

    கனேடிய சட்டத்தின் கீழ் ஹுவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படுவதிலிருந


#Tags

  • Huawei
  • அதிகிரிப்பு
  • வருமானம்
  • வளர்ச்சி
    பிந்திய செய்திகள்
  • டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு
    டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு
  • மாணவியை தண்டிப்பதாகக்கூறி ஆசிரியர் செய்த மோசமான செயல்
    மாணவியை தண்டிப்பதாகக்கூறி ஆசிரியர் செய்த மோசமான செயல்
  • ஈஃபிள் கோபுரம் குறித்த சில சுவாரசிய தகவல்கள்!
    ஈஃபிள் கோபுரம் குறித்த சில சுவாரசிய தகவல்கள்!
  • இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது
    இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது
  • கிழக்கு மாகாண ஆளுநரை சந்திப்பதற்கு அனுமதி மறுப்பு
    கிழக்கு மாகாண ஆளுநரை சந்திப்பதற்கு அனுமதி மறுப்பு
  • கல்கரியில் வெடிப்புச் சம்பவம் பல வீடுகள் சேதம்!
    கல்கரியில் வெடிப்புச் சம்பவம் பல வீடுகள் சேதம்!
  • சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
    சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
  • வின்னிபெக் தீ விபத்து – அதிஸ்டவசமாக தப்பிய குடியிருப்பாளர்கள்!
    வின்னிபெக் தீ விபத்து – அதிஸ்டவசமாக தப்பிய குடியிருப்பாளர்கள்!
  • கீரிமலை கடற்கரையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு
    கீரிமலை கடற்கரையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு
  • பாரிய போராட்டத்துக்கு தயாராகின்றனர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
    பாரிய போராட்டத்துக்கு தயாராகின்றனர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.